புதன், 18 நவம்பர், 2009

ஏன் பேச முடியவில்லை

நேற்றும் இன்றும் அலுவலகத்தில் பயிற்சி வகுப்புகள் நடந்தன. நீண்ட நாடகளுக்குப்பின் நண்பர் விவேகானந்தனை சந்தித்தேன். பேசிக் களித்த நாட்கள் உடன் பணியாற்றிய காலங்கள் நினைவிலாடின, ஆனாலும் அதிகம் பேசிக்கொள்ள இருவருக்கும் போதிய அவகாசம் கிடைக்கவில்லை. சந்த்தித்த போது பல விஷயங்கள் பேச நினைத்தும் முடியவில்லை.

இப்பொழுது இப்பக்கத்தில் எழுதும் போது விவேக்கின் தமிழ் ஆர்வம் (அவர் அப்பா புலவர் திரு ஜனார்த்தனம் அவர்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற வரம்) மனதில் சரமிடுகிறது. நாடகங்கள் எழுதவும் நடிக்கவும் ஹூம்.... இப்பொழுது எப்படி கதை, நாடகம், நடிப்பு ஏதேனும் உண்டா கேட்கவும் இயலவில்லை.

விவேக்கையும் இவ்வலை உலகத்தில் உலவச்சொல்லியுள்ளேன் விரைவில் அவரின் பத்திகளும் வலைக்குள் உலாவரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக