வெள்ளி, 2 மார்ச், 2012

பொதிகை PGB நண்பர்கள் நலச்சங்கத்தில் உறுப்பினரான பின் முதலில் திரு S.A.இஸ்மாயில் அவர்கள் பணிநிறைவு பிரிவுபசார விழாவிற்குதான் சென்றேன். ஆனால் அப்பொழுது நான் விருதுநகரில் பணியாற்றி வந்ததால் மாலையில் தான் வந்து சேர முடிந்தது. இரவு விருந்தில் கலந்து கொண்டு பின் வீடு திரும்பினேன். அதனால் விழாவைப் பற்றிய ஒரு கருத்தும் இல்லாதிருந்தது.

பின் கடந்த மே மாதம் நெடுவயல் கிளைக்கு மாற்றலாகி வந்தபின் ஜூன் மாதம் என்று எண்ணுகிறேன் திரு எம். சுப்ரம்ணியன் அவர்களின் பணிநிறைவு பிரிவுபசார விழாவில் தான் முழுமையாக கலந்து கொண்டேன்.

அதுவரை நடந்த பிரிவுபசார விழாக்களில் நிழற்படமோ வீடியோவோ எடுக்கப் படவில்லை என்பதையறிந்து அன்றைய விழாவிலிருந்து தொடர்ந்து வந்த விழாக்களை ஒலி, ஒளி பதிவு செய்து வருகிறேன்.


அவற்றை http://www.pothigaipgbfriendswelfareassociation.blogspot.in என்ற பக்கத்தில் பதிவு செய்து வருகிறேன். இப்பக்கத்தில் திரு எம். சுப்பிரமணியன், திரு எஸ். சித்திர புத்திரன், திரு எஸ்.சோமசுந்தரம், திரு ஈ.சுப்பையா, திருமதி ஜெ. ஜெஸி ஆகியோரின் பிரிவுபசார விழா பதிவுகளை காணலாம்.

மேற்படி பதிவு http://www.pgbea.net/ல் இணைப்பு பக்கமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.